மதுரையில் இருந்து கொடைரோடு செல்லும் சாலையில் கண்ணனின் குல தெய்வமான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. பரம்பரைபரம்பரையாக தங்கள் குலம் காக்கும் தெய்வமாக கண்ணனின் அப்பா வேதாசலம், அவரது தந்தை, பாட்டன் என எல்லோரும் வழிபட்டு வந்த தெய்வம்.
சிக்கலான பிரச்சனையில் முடிவெடுக்க அம்மனின் காலடியில் பூப்போட்டு பார்க்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருமணம், வீடு கிரஹப்பிரவேசம் போன்ற வீட்டு பெரிய விசேசங்களுக்கு கண்ணனின் பரம்பரை பங்காளி மக்கள் இங்கு முதலில் பத்திரிக்கை வைத்து அம்மனை அழைத்து, ஆசி பெற்ற பிறகுதான் உற்றார், உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார். வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நேர்ந்து கொள்வது , நிறைவேறிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துவது என்று அந்த அம்மன் கோவில் பெரிதும் பிரசித்தம் வாய்ந்தது.
நெடுச்சாலை ஓரம் சிறிதாக இருந்த இக்கோவில், காலம்காலமாக வழிபட்டு வரும் பரம்பரை மக்கள் கொடுத்த நன்கொடை காரணமாக பெரிதாக கட்டப் பட்டு சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிசேகமும் செய்யப்பட்டது. அண்மையில் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கும் போது பழமையான இக்கோவிலை இடித்து அல்லது நகர்த்தி விடாமல், அதற்கேற்றவாறு சாலையை சற்றே வளைத்து இட்டார்கள்.
ஏற்கனவே வரலஷ்மி பூசாரியிடம் சொல்லி அபிசேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே கண்ணன், பவித்ரா உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளுடன் காலையிலேயே கார் ஒன்றை வாடகைக்கு பேசி கிளம்பினர்.
கொடைரோடு சென்றைடைய சுமார் 40 நிமிடம் பிடித்தது. அங்கிருந்து சாலையோரம் இருந்த குலதெய்வம் கோவிலை அடைந்து கண்ணன் குடும்பத்தினர் வழிபாடுகளை தொடங்கினர். இந்த அம்மனை குலதெய்வமாக கொண்ட குடும்பத்தினர் மட்டுமே அக்கோவிலுக்கு அதிகம் வருவர். அன்றைய தினம் கண்ணனின் குடும்பம் தவிர வேறு யாரும் பூஜைக்கு வந்திருக்கவில்லை. எனவே அம்மனின் அபிசேகத்தை அருகில் அமர்ந்து கண்ணன் குடும்பத்தினர் நன்கு கண்டனர். அபிசேகம் முடிய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. பின் அலங்காரம், பூஜை ஆரம்பமானது.
அங்காள பரமேஸ்வரி தாய் வரலக்ஷ்மி வேண்டி வணங்கி சாத்திய மஞ்சள் பட்டுப் புடவையில் அலங்கார ரூபிணியாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மட்டும் ஏதோ ஒரு சோகம் தெரிவதாக வரலட்சுமிக்கு தோன்றியது. "என்ன குற்றம், குறை இருந்தாலும் மன்னித்து, குளிர்ச்சியாகி, என் குலத்தை காக்க வேண்டும் தாயே!" என்று வரலக்ஷ்மி மனமுருக வேண்டினார்.
பூசாரி ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் கற்பூரத் தட்டும் ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.
அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் படக்கென அணைந்து விட்டது. எல்லோருக்கும் கருக்கென்று ஆனது.
"தாயே இது என்ன சோதனை.? ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்? நாங்கள் செய்யும் பூஜையில் என்ன குறை?" என்று வரலக்ஷ்மி வாய்விட்டு அம்மனிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.
'நன்றாக, ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் அணைந்து விட்டதே..' என்ற விசனம் பவித்ராவுக்கும். ஏற்கனவே இருந்த குழப்பங்களில் 'கோவிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்' என்று இங்கு வந்தால்.. ஏன் இப்படி நடக்கிறது? என்று கண்ணன் இப்போது உள்ளபடியாக சிந்திக்க ஆரம்பித்தார்.
அதற்குள் பூசாரி கற்பூரத்தை மீண்டும் ஏறிய வைத்து அம்மனுக்கு காட்டினர். "அம்மா.. அம்மன் ஏதோ குறி சொல்றா..! கொஞ்சம் ஜாக்கிரதையா, எச்சரிக்கையா இருங்க !" என்று பூசாரி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை எல்லோருடைய முகத்திலும் அடித்து, கையிலும் ஊற்றினார். குங்குமம், வீபூதி, சந்தானம் கொடுத்தார். வரலக்ஷ்மி விபூதி இட்டுக் கொள்ள மற்றவர்கள் அனைத்தையும் இட்டுக் கொண்டனர். தன் மாங்கல்ய பலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கி பவித்ரா நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். தனது தங்கத் தாலியின் மீதும் சிறிது தடவிக் கொண்டாள்.
செல்வத்திற்கு லக்ஷ்மி, கல்விக்கு சரஸ்வதி, எதையும் தொடங்குவதற்கு முன் சுழி போட வேண்டிய இடம் பிள்ளையார், கிரகங்கள் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை அருள நவக் கிரக கோவில்கள் என அததுக்கு கோவில்களும், சாமிகளும் உள்ளன. ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை..
அந்த குல தெய்வம் இப்படி கண்ணனின் பூஜை, புனஸ்காரங்களை சரிவர ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஏதோ சமிக்கை செய்கிறதே..? கற்பூரம் அணைந்து விட்டதே...?
கண்ணனின் குலத்தை குல தெய்வம் காப்பாற்றியதா..?
(தொடரும்)
சிக்கலான பிரச்சனையில் முடிவெடுக்க அம்மனின் காலடியில் பூப்போட்டு பார்க்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருமணம், வீடு கிரஹப்பிரவேசம் போன்ற வீட்டு பெரிய விசேசங்களுக்கு கண்ணனின் பரம்பரை பங்காளி மக்கள் இங்கு முதலில் பத்திரிக்கை வைத்து அம்மனை அழைத்து, ஆசி பெற்ற பிறகுதான் உற்றார், உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார். வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நேர்ந்து கொள்வது , நிறைவேறிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துவது என்று அந்த அம்மன் கோவில் பெரிதும் பிரசித்தம் வாய்ந்தது.
நெடுச்சாலை ஓரம் சிறிதாக இருந்த இக்கோவில், காலம்காலமாக வழிபட்டு வரும் பரம்பரை மக்கள் கொடுத்த நன்கொடை காரணமாக பெரிதாக கட்டப் பட்டு சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிசேகமும் செய்யப்பட்டது. அண்மையில் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கும் போது பழமையான இக்கோவிலை இடித்து அல்லது நகர்த்தி விடாமல், அதற்கேற்றவாறு சாலையை சற்றே வளைத்து இட்டார்கள்.
ஏற்கனவே வரலஷ்மி பூசாரியிடம் சொல்லி அபிசேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே கண்ணன், பவித்ரா உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளுடன் காலையிலேயே கார் ஒன்றை வாடகைக்கு பேசி கிளம்பினர்.
கொடைரோடு சென்றைடைய சுமார் 40 நிமிடம் பிடித்தது. அங்கிருந்து சாலையோரம் இருந்த குலதெய்வம் கோவிலை அடைந்து கண்ணன் குடும்பத்தினர் வழிபாடுகளை தொடங்கினர். இந்த அம்மனை குலதெய்வமாக கொண்ட குடும்பத்தினர் மட்டுமே அக்கோவிலுக்கு அதிகம் வருவர். அன்றைய தினம் கண்ணனின் குடும்பம் தவிர வேறு யாரும் பூஜைக்கு வந்திருக்கவில்லை. எனவே அம்மனின் அபிசேகத்தை அருகில் அமர்ந்து கண்ணன் குடும்பத்தினர் நன்கு கண்டனர். அபிசேகம் முடிய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. பின் அலங்காரம், பூஜை ஆரம்பமானது.
அங்காள பரமேஸ்வரி தாய் வரலக்ஷ்மி வேண்டி வணங்கி சாத்திய மஞ்சள் பட்டுப் புடவையில் அலங்கார ரூபிணியாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மட்டும் ஏதோ ஒரு சோகம் தெரிவதாக வரலட்சுமிக்கு தோன்றியது. "என்ன குற்றம், குறை இருந்தாலும் மன்னித்து, குளிர்ச்சியாகி, என் குலத்தை காக்க வேண்டும் தாயே!" என்று வரலக்ஷ்மி மனமுருக வேண்டினார்.
பூசாரி ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் கற்பூரத் தட்டும் ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.
அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் படக்கென அணைந்து விட்டது. எல்லோருக்கும் கருக்கென்று ஆனது.
"தாயே இது என்ன சோதனை.? ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்? நாங்கள் செய்யும் பூஜையில் என்ன குறை?" என்று வரலக்ஷ்மி வாய்விட்டு அம்மனிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.
'நன்றாக, ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் அணைந்து விட்டதே..' என்ற விசனம் பவித்ராவுக்கும். ஏற்கனவே இருந்த குழப்பங்களில் 'கோவிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்' என்று இங்கு வந்தால்.. ஏன் இப்படி நடக்கிறது? என்று கண்ணன் இப்போது உள்ளபடியாக சிந்திக்க ஆரம்பித்தார்.
அதற்குள் பூசாரி கற்பூரத்தை மீண்டும் ஏறிய வைத்து அம்மனுக்கு காட்டினர். "அம்மா.. அம்மன் ஏதோ குறி சொல்றா..! கொஞ்சம் ஜாக்கிரதையா, எச்சரிக்கையா இருங்க !" என்று பூசாரி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை எல்லோருடைய முகத்திலும் அடித்து, கையிலும் ஊற்றினார். குங்குமம், வீபூதி, சந்தானம் கொடுத்தார். வரலக்ஷ்மி விபூதி இட்டுக் கொள்ள மற்றவர்கள் அனைத்தையும் இட்டுக் கொண்டனர். தன் மாங்கல்ய பலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கி பவித்ரா நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். தனது தங்கத் தாலியின் மீதும் சிறிது தடவிக் கொண்டாள்.
செல்வத்திற்கு லக்ஷ்மி, கல்விக்கு சரஸ்வதி, எதையும் தொடங்குவதற்கு முன் சுழி போட வேண்டிய இடம் பிள்ளையார், கிரகங்கள் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை அருள நவக் கிரக கோவில்கள் என அததுக்கு கோவில்களும், சாமிகளும் உள்ளன. ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை..
அந்த குல தெய்வம் இப்படி கண்ணனின் பூஜை, புனஸ்காரங்களை சரிவர ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஏதோ சமிக்கை செய்கிறதே..? கற்பூரம் அணைந்து விட்டதே...?
கண்ணனின் குலத்தை குல தெய்வம் காப்பாற்றியதா..?
(தொடரும்)
4 comments:
தொடர் நல்லா வந்துட்டிருக்கு.,
லேபிள் வசதி தெரியுமாறு செய்ங்க..அப்புறம் லேபிளில் அத்தியாயம் 22 இதுக்குப் பதிலாக அனுபவம், கதை, உண்மைக்கதை என்று விருப்பம்போல் வகைப்படுத்துங்கள்.
படிப்பவருக்கும் வச்தி, சர்ச்இன் ஜின்களில் எளிதில் வரும்..
வாழ்த்துகள்
Thans for comments and suggestions...
ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை.. /
ஆழ்ந்த அருமையான் கருத்துப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Nanri...
Post a Comment