இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 2 November 2011

மதனப் பெண் 17 - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !

பவித்ராவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கண்ணனும் அவரது தாயார் வரலக்ஷ்மியும் வீடு திரும்பினர். 

சில மாதங்களில் பவித்ரா கருத்தடைக்காக  'காப்பர் - டி' வைத்துக் கொண்டாள். குழந்தை பெற்றால் அழகு போய் விடும் என்று ஒரு கருத்து எல்லா தாய்மார்கள் மனதிலும் இருப்பது. ஆனால் அது பவித்ராவின் விசயத்தில் பொய்த்துப் போனது. பவித்ரா முன்னைக் காட்டிலும் அழகாக ஆனாள். 

பவித்ரா தன்னை அழகு படுத்திக் கொள்ள எந்த அழகு நிலையத்திற்கும் செல்வதில்லை. இயற்கையான அழகு அவளிடம் ஒட்டி கொண்டிருந்தது. குளிக்க மைசூர் சாண்டல் சோப். பூசிக் கொள்ள பாண்ட்ஸ் பவுடர். கண்ணனுடன் வெளியில் செல்வதென்றால் முகத்திற்கு கொஞ்சம் விகோ டர்மரிக் கிரீம். ஆனால் சென்ட் போன்ற வாசனை திரவியங்களை பவித்ரா போட்டுக் கொளவதில்லை. தேவைப்படும் போது மெலிதாக கொஞ்சம் லிப்ஸ்டிக்.    பவித்ரா எப்பவும் ஜாலி. இது கொஞ்சம் அதிகமானால் பவித்ரா மற்றொரு வேலையும் செய்து கண்ணனை அசத்துவாள். உறவினர்களைப் பார்க்க வரலக்ஷ்மி நிலக்கோட்டைக்கோ, திண்டுக்கல்லுக்கோ சென்று இருக்கும் போது, பவித்ரா இரட்டை ஜடை பின்னிக் கொண்டு, பாவாடை தாவணி அணிந்து கொண்டு கண்ணனை சூடேற்றுவாள். 'என் செல்லம்.. உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணி.. மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கனம் போல ஆசையா இருக்குடி" என்று கண்ணன், பவித்ராவின் மடியில் தஞ்சமவார்.

கல்யாண விசேசம் என்றால் பட்டுப் புடவை. அதுவும் அவள் பட்டுப்புடவை கட்டிக் கொள்ளும் அழகே தனி. துணிக் கடை பொம்மைக்கு பட்டுபுடவை கட்டினால் எப்படி மிக நேர்த்தியாக இருக்குமோ அவ்வாறு கச்சிதமாக கட்டிக் கொள்வாள். புடவையின் முன் மடிப்புகள் சீராக அமைந்து இருக்கும். தலை  முடியை நன்றாக இறுக்கமாக தூக்கி வாரி, இரட்டை சரம் மல்லிப்பூ வைத்துக் கொண்டு,  பட்டுப் புடவையில் அவள் நடந்து வந்தால் பார்க்க கண் கோடி வேண்டும்.  நகை அணிந்து கொள்வதில்,  கழுத்தோரத்தில் இரண்டு வரிசை அமெரிக்கன் டைமண்ட்ஸ் கல் பதித்த அட்டிகை, முகப்புடைய ஒரு லாங் செய்ன், நெத்திச் சுட்டி, பச்சைக்கல் தோடு, இரண்டு கை விரல்களில் ஒன்றில் கல்மோதிரம், மற்றொன்றில் 'பி' என எழுத்து போட்ட மோதிரம், இரண்டு பிளைன் தங்க வளையல்களுக்கு நடுவே கல் பதித்த தங்க வளையல் ஒன்று, மிகவும் கிரான்ட் பங்சன் என்றால் வரலட்சுமிக்கு வேதாசலம் அந்த காலத்தில் செய்து கொடுத்த வங்கி, ஒட்டியாணம் ஆகியவற்றை பவித்ரா அணிந்து கொள்வாள். இப்படி நகைகளால் பவித்ராவிற்கு அழகா, பவித்ராவால் அந்த நகைகளுக்கு அழகா என்று கண்டறிய முடியாது. 

அதுபோல், எங்காவது பிக்னிக்,  வெளியூர் டூர் என்றால் சல்வார், கமிஸ்.  சில சமயங்களில் ஜீன்ஸ் பான்ட் போட்டும் அசத்துவாள். உள்ளூர், வெளியூர் கோவில் என்றால் காட்டன் புடவை. கொண்டை ஜடை. எந்த உடை என்றாலும் அது பவித்ராவிற்கு மிகவும் பொருந்தி வந்தது. 

எத்தனை வெய்யிலில் வெளியில் சென்று வந்தாலும் கொஞ்சம் கூட வியர்வை வாசம் என்பதே பவித்ராவிடம் கிடையாது. தனது பிறந்த வீடான கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ கசகசவென வந்து சேர்ந்த பிறகு, கண்ணன் அவளிடம் நெருங்கினால் அவளிடமிருந்து ஒப்புக்கு  கூட வியர்வை வாடை வராது. மாறாக மஞ்சள் வாசனை வீசும். இது கண்ணனுக்கு வியப்பை தரும் !

மனைவி அழகானவளாக, அன்பனவளாக, பொறுமையானவளாக, குணசாலியாக, புத்திசாலியாக அமைந்து விட்டால் கணவனின் மண வாழ்க்கை வரம் பெற்றதாகும். அதாவது 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பேச்சுவழக்கு கண்ணனின் வாழ்வில் உண்மையாகிப் போன ஒன்று. கண்ணனுக்கு மிக நல்ல மனைவியாக பவித்ராவை இறைவன் வழங்கி வரம் கொடுத்திருந்தார். 

பவித்ராவிற்கு பிறந்த ஆண் குழந்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஒரு நல்ல நாளில் அதற்கு 'சத்திய தேவ்' என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கண்ணனும் பவித்ராவும் 'சத்யா' என்று அழைத்து மகிழ்ந்தனர். வரலக்ஷ்மி 'தேவா' என்று அழைத்து மகிழ்ந்தார். 

இதற்கிடையில் முதல் குழந்தை ரோஹிணி பாலர் பள்ளிப் படிப்பை முடித்து விட்டாள். வயது 3-க்கு மேல் ஆகி விட்டது. எனவே மதுரையில் புகழ் பெற்ற ஆங்கில பள்ளி ஒன்றில் அவளை எல்.கி.ஜி.-யில் கண்ணன் சேர்த்தார். ரோஹிணியை பள்ளிக்கு அனுப்ப, வீடு திரும்பியவுடன் அதற்கு படங்களைக் கட்டி பாடங்களை சொல்லித் தர, பகல் பொழுதில் சத்தியதேவை கவனித்துக் கொள்ள என  பவித்ராவிற்கு பொழுது சென்று கொண்டிருந்தது.  வரலக்ஷ்மி கூடமாட ஒத்தாசை செய்து கொண்டிருந்தார். 

கண்ணன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி இருக்கும் வீட்டை சற்று ஆல்டர் செய்து மாடியில் ஒரு பெரிய அலுவலகத்துடன் கொண்ட நவீன வீடு ஒன்றை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அதற்கான வேலைகள் ஒரு நல்ல நாளில் தொடங்கின. 

மேல் வீடு கட்டும் போது படுக்கையறை எப்படி இருக்க வேண்டும், அதில் வாஸ்துபடி தென் மேற்கு மூலையில் தலை வைத்து படுப்பதற்கு வசதியாக கட்டில் எப்படி போட வேண்டும், அந்த அறையில் ஏ.சி. எங்கு பொருத்தவேண்டும், டி.வி. எங்கு வைக்க வேண்டும், டிரஸ்ஸிங் டேபிள் எங்கு இருக்க வேண்டும், அட்டசெட் பாத்ரூமில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பவித்ரா டிசைன் செய்தாள். 

அலுவலக கட்டுமானத்தை பொறுத்தவரை கண்ணன் பிளான் செய்தார். அதாவது கட்சிகாரர்கள் தெருவிலிருந்து நேராக மாடிப்படி ஏறி  அலுவலத்திற்கு வந்து, முன் பகுதியில் உள்ள காத்திருக்கும் அறையில் அமர்ந்து, பின் அழைப்பின் பேரில் பிரதான கதவை திறந்து கொண்டு அலுவலத்தில் நுழைவது போன்று பிளான். பெரிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கண்ணனின் பிரத்யோக அறை (சேம்பர்). மற்ற பகுதிகளில் ஜூனியர், டைப்பிஸ்ட் அமர சேர், டேபிள்கள். சுவர் முழுக்க சட்ட புத்தகங்கள் வைக்க செல்ப்கள். இரண்டு ஸ்ப்ளிட் ஏ.சி.

அலுவலக பகுதி முடிந்தவுடன், படுக்கையறை, பின் மற்றொரு அறை (இது சமையலறையாக பயன்படும் வண்ணம் பிளான் செய்யப்பட்டது), அதற்குப் பிறகு மற்றொரு படுக்கை அறை. இது முடிந்தவுடன் கீழ் வீட்டிக்கு பின்புறமாக இறங்கும் வண்ணம் ஒரு படிக்கட்டு. இது நேராக கீழ் வீட்டின் சமையல் அறை வாசலுக்கு சென்று முடியும்.

கட்டடம் வளர்ந்து கொண்டு வந்தது... கண்ணனின் வாழ்வும் வளர்ந்து கொண்டு வந்தது.. குழந்தைகள் வளர்ந்து வந்தனர்.... கண்ணன் பவித்ரா அன்பும், புரிதலும்  வளர்ந்தன.

இவர்களது சந்தோஷமான வாழ்கை உற்றார், உறவினர், அண்டை வீட்டினர், சக வழக்குரைஞ நண்பர்கள் என எல்லோரும் பொறாமைப்படும்படி இருந்தது. 

(தொடரும்) 

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பேச்சுவழக்கு கண்ணனின் வாழ்வில் உண்மையாகிப் போன ஒன்று. கண்ணனுக்கு மிக நல்ல மனைவியாக பவித்ராவை இறைவன் வழங்கி வரம் கொடுத்திருந்தார்.

இனிமையான பகிர்வு, பாராட்டுக்கள்..
i

இராஜராஜேஸ்வரி said...

ப்டங்கள் பொருத்தமாகவும்,
பதிவுக்கு அழகு சேர்ப்பதாவும்
அமைத்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

Advocate P.R.Jayarajan said...

//இனிமையான பகிர்வு, பாராட்டுக்கள்..//

Nanri...

Advocate P.R.Jayarajan said...

//ப்டங்கள் பொருத்தமாகவும்,
பதிவுக்கு அழகு சேர்ப்பதாவும்
அமைத்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.//

Special thanks for comments..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...