இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday 11 October 2011

மதனப் பெண் 5 - மாப்பிள்ளைக்கு கடிதம்

வக்கீல் மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பற்றி கடிதம் எழுதுவது என்று லலிதாவின் அப்பா அப்புசாமி தீர்மானம் செய்தார்.

இவரை இங்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும்.

ரொம்ப எளிமையானவர். நேர்மையானவர். வம்பு தும்புக்கு போகாதவர். நல்ல மனிதர். யாரையாவது ஒட்டி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் கொண்டவர். அலுவலகம் செல்லும் நேரம் தவிர அவர் ஒரு வீட்டுப் பறவை. அதே நேரத்தில் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. மனைவிக்கு கூஜா தூக்கி. சில சமயங்களில் சொல்வர் பேச்சைக் கேட்டு நல்லவர்களையும் பகைத்துக் கொள்வார். துன்பங்களையும் வரவழைத்துக் கொள்வார். சுய சிந்தனை குறைவு.

இப்போது கூட அவராக கடிதம் எழுதவில்லை. வீட்டின் தலைவர் என்ற முறையில் தனது பொம்மனாட்டியின் பேச்சைக் கேட்டு, தனது மகள் லலிதாவின் எடுப்பார் கைப்பிள்ளையாகி வக்கீல் மாப்பிள்ளைக்கு கடிதம் எழுதுகிறார். 

அப்புசாமியின் மனைவி அதாகப்பட்டது லலிதாவின் தாயார் சுந்தரி பணம் என்றால் வாயை பிளப்பார். அப்புசாமியின் சொற்ப சம்பளம் சென்னை வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. ஆனால் சுந்தரிக்கு சொகுசாக, ஆடம்பரமாக வாழ வேண்டும். வருமானத்தை எப்படியாவது கூட்ட வேண்டும் என்ற எண்ணம். அப்புசாமிக்கு வயது 57. சுந்தரிக்கு வயது 48. வீட்டில் ஒரு அடிப்படை சாமான் கூட இல்லை. ஒரு பிரிட்ஜ், வாசிங் மெசின், நல்ல டிவி, மியூசிக் பிளேயர் என எதுவும் கிடையாது. எல்லாம் வேண்டும், தானும் மற்ற உறவுக்காரப் பெண்கள் போல் மார்பு நிறைய நகை போட்டு மிடுக்குடன் வாழ வேண்டும் என்ற அவா அவரது மனதை எப்போதும் அரித்துக் கொண்டே இருக்கும். பணம்.. பணம்.. என கழுத்து வரை அதே ஓயாத குரல் அடி வயிற்றிலிருந்து சுந்தரிக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும். 

நூலை போலதானே  சேலை வரும். மகள் லலிதாவிற்கும் இதே எண்ணம்தான். இவர்கள் இருவருக்கு மத்தியில் ஒரு சேவகனாக அப்புசாமி வாழ்ந்து பழகி விட்டார்.  அதுபோல் இவர்களுக்கு யாராவது உதவிக்கொண்டே இருந்தால் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். உதவி செய்தவர் தனது சூழல் காரணமாக உதவ மறுத்தால் அவரை அடுத்த நிமிடம் நன்றி மறந்து  குறை கூறவும் தயங்க மாட்டார்கள்.

தாய் மற்றும் மகளுக்கு பணத்தாசை. தந்தையின் கையாலாகத்தனம். இதனால்  மகளுக்கு தாரமிழந்த, இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பற்றி கடிதம் எழுத வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஒரு நல்ல நாள் பார்த்து அப்புசாமி மதுரை, கீழவெளி வீதியில் உள்ள மாப்பிள்ளைக்கு லலிதாவின் ஜாதகத்தை இணைத்து கடிதம் எழுதினார். மாப்பிள்ளையின் ஜாதகத்தை அனுப்பும்படியும் அப்புசாமி கேட்டிருந்தார். ஆனால் தனது மகளின் கதை என்ன என்பது பற்றி அவர் ஏதும் எழுதவில்லை. 

ஏற்கனவே தனக்கு செய்வாய் தோஷம் உள்ளது என்று விளம்பரத்தில் மாப்பிள்ளை குறிப்பிட்டு இருந்த காரணத்தால், இந்த இடம் குதிர்ந்து வரும் என்று லலிதா உட்பட அனைவரும் நம்பினார். 

ஆனால் லலிதாவின் கதை கேட்டால், மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்வார்களோ என்று அப்புசாமி மட்டும் தனக்கு எட்டியவரை சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அப்புறம் என்ன நடந்தது?

(தொடரும்...) 

4 comments:

stalin wesley said...

first time nice your blog

இராஜராஜேஸ்வரி said...

வக்கீல் மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பற்றி கடிதம் எழுதுவது என்று லலிதாவின் அப்பா அப்புசாமி தீர்மானம் செய்தார்.!!!??

vetha (kovaikkavi) said...

அப்புறம் என்ன நடந்தது?
பார்ப்போம்....
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

vetha (kovaikkavi) said...

Happy pongal vaalthukal...
Vetha.Elangathilakam.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...