இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Monday 10 October 2011

மதனப் பெண் 4 - திட்டம்

பல மனக் குழப்பங்களுக்கு நடுவே லலிதாவும் அவரது பெற்றோரும் இருந்தனர். 

அவரது உறவினர்கள் சிலர் லலிதாவிற்கு வரன் பரிந்துரை செய்தனர். லலிதாவின் பெரியம்மா ஒருவர் ஒரு வியாபாரி வரன் பற்றி கூறினார். அவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பவர்களுக்கு சுண்டல், முறுக்கு சப்பளை செய்பவராம். ஆனால் அந்த வரன் லலிதாவிற்கு பிடிக்கவில்லை. லலிதாவின் கதை கேட்டிருந்தால் அந்த சுண்டல் விற்பவருக்கு பிடிக்காது போயிருக்கும்.

பின் மற்றொரு உறவினர் துபாய் வரன் பற்றி பரிந்துரை செய்தார். ஆனால் அது தட்டிப் போனது. லலிதாவின் கதையை ஏற்கனவே அவர் கேளிவிப்பட்டதலோ என்னோவோ !

இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். லலிதாவிற்கு ஜாதகத்தில் செய்வாய் தோஷம் வேறு. எனவே தோசமுள்ள மாப்பிள்ளை வேண்டி லலிதாவின் பெற்றோர்கள் கோவில்கோவிலாக கோரிக்கை வைத்து வழிபட்டனர். 

லலிதாவும் பெற்றோர் படும் அவஸ்தை கண்டு தனக்கு சீக்கிரம் ஒரு  திருமணம் நடந்து விட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினாள்.

அவள் மங்கையர் மலர் புத்தகத்தில் வரும் மணமகள்/மணமகள் தேவை பகுதியில் தேட ஆரம்பித்தாள். சட்டென ஏதும் பிடிபடவில்லை. அச்சமயத்தில்  ஒரு தமிழ்  நாளிதழில் மணமகள் தேவை என்ற பகுதியில் விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அதில் மதுரையில் வழக்குரைஞராக உள்ள மணமகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை என்று கண்டிருந்தது. நல்ல வருமானம். மணமகனுக்கும் செய்வாய் தோஷம்.

எனவே ஏன் இந்த விளம்பரத்திற்கு பதில் அனுப்பக்கூடாது என்று லலிதா நினைத்துக் கொண்டே தொடர்ந்து வாசிக்க தொடங்கினார். அந்த மணமகன் தாரமிழந்தவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு என்றும் கண்டிருந்தது. 

இதை வாசித்த லலிதாவின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

மாறாக தனக்கு தோதான மாப்பிள்ளை என்று அவள் நினைத்தாள். எனவே இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்க முயற்சி செய்யும்படி தனது பெற்றோரிடம் சொன்னாள். அவர்களும் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லாமல் லலிதாவின் விருப்பத்தின்படி செய்ய ஆரம்பித்தனர். 

லலிதா தனக்கு வரும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு தாரமிழந்தவர் என்பதையோ, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன என்பதையோ பொருட்படுத்தவில்லை. அவர் தனக்கு ஏற்ற ஜோடி என்று நினைத்தாள். குறிப்பாக மாப்பிள்ளை ஒரு வக்கீல் என்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஏன் அப்படி பிடிக்க வேண்டும் ? 

அவளது உள்மனதில் இருந்த நீண்ட திட்டத்தை அப்போது யாரும் அறிந்திருக்கக் வாய்ப்பில்லை. 

(மேலும் சொல்கிறேன்...) 

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவளது உள்மனதில் இருந்த நீண்ட திட்டத்தை அப்போது யாரும் அறிந்திருக்கக் வாய்ப்பில்லை.

விறுப்பான கதைக்குப் பாராட்டுக்கள்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//அவளது உள்மனதில் இருந்த நீண்ட திட்டத்தை அப்போது யாரும் அறிந்திருக்கக் வாய்ப்பில்லை.

விறுப்பான கதைக்குப் பாராட்டுக்கள்.//

தொடர் ஆதரவிற்கு நன்றி..

vetha (kovaikkavi) said...

உள் மனத் திட்டம் எதுவாக இருக்கும்?...பார்ப்போம்....
வேதா. இலங்காதிலகம்.
http:/7kovaikkavi.wordpress.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...