"லக்ஷ்மியம்மா ! உங்க மகனுக்கு ரெண்டு குழந்தை ஆயிடிச்சு.. அதுவும் ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு ரெண்டு.. இப்போ கருத்தடை ஆபரேசன் செய்துகிறது நல்லது. அதுவும் உங்கள் மகன், மருமகள் ரெண்டு பேரும் விரும்பறாங்க.. ஆபரேசன் பண்ணிக்கட்டுமே ! கருத்தடை இல்லையென்னா இன்னொரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு. தேவையான்னு பாருங்க" என்றார் மருத்துவர்.
"டாக்டர் நீங்க சொல்றது சரிதான். ஆனா கருத்தடை ஆபரேசன் செய்துகிட்ட பிறகு மறுபடியும் ஒரு குழந்தை வேணுன்னு நினைக்கிறோம். அது சாத்தியம் இல்லமே போய்டுமே டாக்டர்" என்றார் வரலக்ஷ்மி.
"ஏன் சாத்தியம் இல்லே.. கட் பண்ணின பிலோபியன் டியுபை மறுபடியும் ஒரு ஆபரேசன் செய்து ஜாயின் பண்ணினா போச்சு.. மீண்டும் கருத்தரிக்கலாம்," என்றார் மருத்துவர் சற்று கூலாக..
"இதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டர். அதுவுமில்லமே கருத்தடை ஆபரேசன் செய்துகிட்ட என்னோட சில உறவுக்காரப் பெண்களுக்கு இடுப்பு வலி, மென்சஸ் ப்ராபளம் அது இதுன்னு ஏதாவது ஒரு கோளாறு தொடர்ந்து வந்து கிட்டே இருந்தது. அதுவுமில்லமே எங்க ஹஸ்பெண்ட் ஒரு டாக்டரா இருந்தவர். அவர்கிட்டே இந்த மாதிரி நிறைய கேஸ் வந்திருக்கு.. எனக்குத் தெரியும். அதெல்லாம் என் பொண்ணு பவித்ராவுக்கு வரக்கூடாது. அவ எப்பவும் சௌக்கியமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்க டாக்டர்"
இதை கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா, தனது அத்தை தன் உடல் நலம் முன்னிட்டே இந்த அறுவைக்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்பதை அறிந்து, "சே, இவரை போய் திடீரென 'மாமியராகிவிட்டரோ' என்று நினைத்து விட்டோமோ" என்று ஒரு நிமிடம் குறுகிப் போனாள். அதுவும், பேச்சின் நடுவே தன்னை "என் பொண்ணு பவித்ரா" என்று குறிப்பிட்டு வரலக்ஷ்மி பேசியதை நினைத்து பவித்ராவுக்கு தனது அத்தை தனக்கு எப்போதும் இன்னொரு தாய்தான் என்று மகிழ்ந்தாள்.
இதற்கிடையில் மருத்துவர், "ஒ.கே. கருத்தடை ஆபரேசன் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு உங்க மனசிலே ஆழமா பதிஞ்சு இருக்கு லக்ஷிமியம்மா. அதுக்கு பதிலா வேறு ஒரு சிம்பிள் மெத்தட் இருக்கு." என்றார்.
"டாக்டர்.. கொஞ்ச காலத்துக்கு கர்ப்பமும் தரிக்கக் கூடாது.. மறுபடியும் குழந்தை பெக்கறா மாதிரியும் இருக்கணும். உடம்புக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது.. ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும். இதுதான் எனக்கு வேணும்" என்று இம்முறை வரலக்ஷ்மி தெளிவாக தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
"லக்ஷ்மியம்மா.. அதுக்கு ஒரே வழி.. 'காப்பர் டி' வச்சுகிரதுதான். ஆபரேசன் கிடையாது. ரொம்ப சிம்பிள். சைடு எபக்ட் ஒன்னும் வராது. தேவைப்பட்ட எடுத்திடலாம். மீண்டும் கர்ப்பம் தரிக்கலாம்," என்று மருத்துவர் கூறினார்.
இது பவித்ரா, கண்ணன், வரலக்ஷ்மி என எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. எல்லோரும் ஒருமனதாக இதற்கு இசைந்தனர். தனது தாய் இவ்வளவு விவரங்களை மருத்துவரிடம் கேட்டறிந்து ஒரு முடிவுக்கு வந்தது கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. குறிப்பாக, பவித்ராவிற்கு உடல் பிரச்னையும் வரக்கூடாது, அதே நேரத்தில் அவளது விருப்பத்திற்கும் தடை போடக் கூடாது என்று தனது தாய் நினைத்தது கண்ணனுக்கு பெருமையாக இருந்தது.
மருத்துவர், "இப்போ பவித்ராவை டிஸ்ஜார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க.. ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் வாங்க.. அப்போ செக் பண்ணி 'காப்பர் டி' வச்சுக்கலாம்" என்றார்.
கண்ணன் - பவித்ரா ஏற்கனவே ஒருவருக்கொருவர் மிகவும் அன்பானவர்கள். நன்கு புரிந்து கொண்டவர்கள். இவர்களது புரிதலில் வரலக்ஷ்மியும் இணைந்தது இன்னும் சிறப்பு. பவித்ராவை ஒரு தாயாக வரலக்ஷ்மி தாங்குகிறார். பவித்ராவும் அப்படியே. சம்பந்தி சுந்தரம், வரலக்ஷ்மிக்கு சொந்த அண்ணன். அவரோ, அவரது மனைவி சர்மிளாவோ எதையும் கண்டு கொள்வதில்லை. இங்கு பிறந்த வீட்டில் இருந்த தங்கள் பெண், மற்றொரு பிறந்த வீட்டிற்கு சென்று சுகமுடன் வாழ்கிறாள் என்ற மகிழ்ச்சியில் அவர்கள். இப்படி முழுமையாக புரிந்து கொண்ட குடும்பத்தில் குதூகலம் சேர்க்க இரண்டு குழந்தைகள். கண்ணனுக்கு கண்ணியமான தொழில், கை நிறைய வருமானம். வீடு முழுக்க மழலை சொல்! பவித்ராவின் கலகல சிரிப்பு !!
இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?
நினைத்தாலே இனிக்கின்றது !
(தொடரும்)
4 comments:
அருமை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html
Nanri...
இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?
நினைத்தாலே இனிக்கின்றது !
//இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன? நினைத்தாலே இனிக்கின்றது !//
unmaithaan !
Thanks for comments
Post a Comment