இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Showing posts with label அத்தியாயம் 11. Show all posts
Showing posts with label அத்தியாயம் 11. Show all posts

Tuesday, 18 October 2011

மதனப் பெண் 11 - இது ஊட்டியில் அடித்த லூட்டி!

'ஜில்பிலியுடன்' அனைவரும் சுகமாக மதுரை வந்தடைந்தனர். 

எல்லோரையும் கண்ணின் தாயார் வரலஷ்மி வரவேற்றார். பேத்தியை மெல்ல தூக்கி உச்சி மோர்ந்து தோளில் தூக்கி போட்டுக் கொண்டார். 

பவித்ரா சமையல் கட்டுக்குள் சென்று எல்லோருக்கும் உணவு தாயார் செய்தார். மறுநாள் காலை சுந்தரம் கோவை புறப்பட்டு சென்றார்.

கண்ணனும்-பவித்ராவும் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்த்தனர். ஒரு நல்ல நாளில் அனைவரையும் அழைத்து குழந்தைக்கு கண்ணன் 'நாமகரணம்' செய்து 'தொட்டிலில் இட்டார்.' 'ஜில்பிலி'-க்கு ரோஹிணி என்று பெயர் சூட்டப்பட்டது. 

கண்ணன் மெல்ல மெல்ல நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார். பணிப்பளு கூடிக் கொண்டே வந்தது. நிறைய வழக்குகள் வந்த காரணத்தால் தனது சீனியர் அலுவலத்தில் இருந்து கண்ணன் நின்று விட்டார். பின் வீட்டிலேயே ஒரு அறையில் தனியாக அலுவலகம் வைத்து நடத்தினார். 

எது எப்படி இருந்தாலும் பவித்ராவிடம் கண்ணனுக்கு இருந்த காதலும்,  ஆசையும், அன்பும் சற்றும் குறையவேயில்லை. அதே மாதிரி பவித்ராவிற்கும். இந்த அன்பும், ஆசையும் பன்மடங்கு கூடிக் கொண்டே சென்றது. வாரத்தில் ஒரு நாள் சினிமா, சிம்மக்கல் கோனார் கடை டிபன் அல்லது பனமரத்து முனியாண்டி விலாஸ் பிரியாணி, ஐஸ் கிரீம் என மகிழ்ச்சியாக சென்றது. கண்ணனிடம் பணம் சேரும் போதெல்லாம் அவர் பவித்ராவிற்கு சிறு சிறு நகைகள் செய்து போட்டார். பண்டிகை நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

அதே நேரத்தில் குழந்தை ரோஹினியும் தவழ்ந்து, நின்று, மெல்ல கைபிடித்து நடந்து, பின் தானாக நடந்து வளர்ந்து கொண்டே வந்தாள். 'கதக்கா...  பிதக்கா' என்ற அவளது மழலை மொழியில் குடும்பமே மகிழ்ந்தது. ரோஹிணிக்கு ஒரு நல்ல நாளில் காது குத்தும் வைபவமும் சிறப்பாக நடந்தது. 

ரோஹிணியை ஒரு விஜய தசமியின் போது பிளே ஸ்கூலில் கண்ணன் சேர்த்தார். இப்படி இரண்டரை வருடங்கள் சென்று விட்டன. 

டிசம்பர் மாதம், நீதிமன்றம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விட்டிருந்த போது, பவித்ரா மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு கண்ணன் கோவையில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு விருந்து, உபசாரம் என இரண்டு நாட்கள் சென்றன. 

"இப்படியே இங்கேயே இருப்பதற்கு ரெண்டு நாள் ஊட்டி போயிட்டு வாங்களேன்.. குழந்தையை நாங்க பாத்துக்கிறோம்" என்று சுந்தரமும், சர்மிளாவும் கூறினார். "இப்போ ரொம்ப குளிரா இருக்குமே.." என்று பவித்ரா கூறினாள். "அதுக்குத்தான் போயிட்டு வாங்கன்னு சொல்றோம் ... கிளைமேட் என்ஜாய் பண்ணலாம் இல்லையா?" என்று சர்மிளா உதட்டோரம் ஒரு புன்சிரிப்புடன் சொன்னார். சரியென குழந்தையை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு கண்ணனும் பவித்ராவும் ஊட்டி சென்றனர்.

ஊட்டியில் டிசம்பர் மாத குளிர் உள்ளபடி பல்லை கிட்டியது. உயர்தர விடுதி ஒன்றில் கண்ணனும், பவித்ராவும் தங்கிக் கொண்டு ஊட்டியை சுற்றிப் பார்த்தனர். நல்ல குளிர்.. ஆனால் அவர்களுக்கு அறையில் போர்வை தேவைப்படவில்லை. தனது மம்மி சர்மிளா சொன்னது பவித்ராவிற்கு நியாபகம் வந்தது.

பின் கோவை கிளம்பி, கண்ணன், பவித்ரா, ரோஹிணி அனைவரும் மதுரை வந்தடைந்தனர்.

ஒரு மாத காலம் சென்றிருக்கும். பவித்ராவிற்கு குமட்டிகுமட்டி வாந்தி வந்தது. 

"என்ன பவித்ரா.. உடம்பு சரியில்லையா?" என்று கண்ணன் கேட்டார்.

அதற்கு பவித்ரா, "உம்.... இது ஊட்டியில் அடித்த லூட்டி ! அதுக்கு  பிரைஸ் கிடைச்சிருக்கு" என்றாள்.

கண்ணனுக்கு புரிந்தது.. 

பவித்ரா மீண்டும் கர்ப்பவதி ஆனாள்.

(தொடரும்..) 
Related Posts Plugin for WordPress, Blogger...